கடன் எல்லை மேலும் 400 பில்லியன் ரூபாவினால் அதிகரிப்பு

கடன் எல்லை மேலும் 400 பில்லியன் ரூபாவினால் அதிகரிப்பு

இந்த (2021)  வருடத்திற்கான கடன் எல்லை மேலும் 400 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கபடவுள்ளது.

 இதற்கமைவாக 2997 பில்லியன் ரூபாவுக்கான 2020ஆம் ஆண்டு இரண்டாம் இலக்க நிதி ஒதுக்கீடு சட்டமூலத்தை திருத்தி அரசாங்கத்தின் கடன் எல்லை 3397 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நிதிஅமைச்சர்; பெசில் ராஜபக்ஷ நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

11.          2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்தம் செய்தல் - (விடய இலக்கம் 31)

2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டுக்கான கடன் எல்லையாக 2,997 பில்லியன் ரூபாய்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும், கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக மேலெழுந்துள்ள நிலைமையில் அரச வருமானம் குறைவடைந்தமையும், சுகாதாரத் துறையின் செலவும் சமூகத்தில் வருமானம் இழந்தவர்களின் சமூகப் பாதுகாப்பு, தமது வருமானத்தில் சம்பளம் வழங்கும் நிறுவனங்களின் வருமானம் இழக்கப்பட்டமையால் சம்பளம் மற்றும் ஏனைய செலவுகளுக்காக மேலதிக நிதியொதுக்கீடுகளை வழங்குவதற்கு நேரிட்டமையாலும், இதர துறைகளில் ஏற்பட்ட செலவு அதிகரிப்பாலும் 2021 ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லையை அதிகரிப்பதற்கு நேரிட்டுள்ளது. அதற்கமைய 2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ள 2,997 பில்லியன் ரூபாய்கள் கடன் பெறும் எல்லையை 400 பில்லியன் ரூபாய்களால் அதிகரித்து 3,397 பில்லியன் ரூபாய்களாக திருத்துவதற்கும், அதற்காக குறித்த ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காகவும் நிதி அமைச்சர் அவர்கள்;  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மூலம் - அரசாங்க தகவல் இணையம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image