பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கோரி மகஜர் கையளிப்பு

பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கோரி மகஜர் கையளிப்பு

பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி நியமனத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவிடம், அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தினால் மகஜர் ஒன்று நேற்று (21) கொழும்பில் வைத்து வழங்கப்பட்டது.

2020 ம் ஆண்டு செப்டம்பர் 2ம் திகதி நியமனம் வழங்கப்பட்ட நிலையில் ஒரு வருடம் கடந்தும் பட்டதாரிகள் பயிலுனர்களாகவே கடமையாற்றி வருகின்றார்கள். இதனை முன்வைத்து நிரந்தர நியமனம் வழங்குமாறும் மகஜர் கையளிக்கப்பட்டது.

பயிற்சியாளர்களை நிரந்தரம் செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு முதல் முறையாக அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தினரை சந்தித்;தனர். பயிற்சியாளர்களை நிரந்தரமாக்க கோரி நியமனத்துக்கு பொறுப்பான அமைச்சர் குழுவிடம் மகஜர் ஒன்றினை கையளிக்கப்பட்டது.

அமைச்சர்கள் குழுவை ஒருங்கிணைநத பயிர்சியாளர் சங்கத்தின், தம்மிக்க முனசிங்க மற்றும் தென்னே ஞானந்த தேரர் ஆகியோர் சந்தித்து மகஜரை வழங்கினார்கள்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image