அரச சேவையில் நாடுமுழுவதும் 4,000 வெற்றிடங்கள்

அரச சேவையில் நாடுமுழுவதும் 4,000 வெற்றிடங்கள்
நாடுமுழுவதும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் சுமார் 4,000 வைத்தியர் வெற்றிடம் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் 1,000 வைத்தியர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
அவர்களில் ஒரு தரப்பினர் தனியார் துறையில் சேவைக்கு செல்வதுடன், மற்றுமொரு தரப்பினர் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்வதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
 
வெளிநாடுகளுக்கு செல்லும் சில வைத்தியர்கள் மீண்டும் நாடு திரும்புவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image