புதிய பரிணாமத்துடன் இன்று முதல் மீண்டும் யுக்திய சுற்றிவளைப்பு

புதிய பரிணாமத்துடன் இன்று முதல் மீண்டும் யுக்திய சுற்றிவளைப்பு

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் புதிய பரிணாமத்துடன் இன்று(04) முதல் மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றது. 

நவீன யுக்திகளுடன் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். 

போதைப்பொருளுக்கு அடிமையானர்களுக்கான புனர்வாழ்விற்காக பல்வேறு செயற்றிட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார். 

அதன்கீழ், குருணாகல் - கல்வல பிரதேசத்தில் இன்று(04) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. 

இதன்போது போதைப்பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image