கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (06), நாளையும் (07) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சுகயீன விடுமுறையை அறிவித்து நாடளாவிய ரீதியில் கடமைகளில் இருந்து விலகி, தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள அகில இலங்கை சுதந்திர கிராம ​உத்தியோகத்தர்கள் சங்கம், சம்பளம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகள் உள்ளிட்ட மேலும் சில தொழில்சார் பிரச்சினைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image