வரி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம்!

வரி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம்!

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக்கொள்கை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை வங்கி ஊழியர்கள் இன்று (13) தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் கறுப்பு ஆடை அணிந்து ஊழியர்கள் பணிக்கு வருகைத் தந்துள்ளனர் என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை (14) நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்க அரசாங்கம் தவறும் பட்சத்தில் 15ம் திகதி ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image