கடவுச்சீட்டை பெற விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!

கடவுச்சீட்டை பெற விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!

கடவுச்சீட்டுக்களை பெற நேரம், மற்றும் திகதியை முன்பதிவு செய்தவர்களுக்கான விசேட அறிவிப்பொன்றை குடிவரவு குடியல்வு திணைக்களம் வௌியிட்டுள்ளது.

அதற்கமைய, திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்தவர்கள் அவர்களுக்கான தினத்திற்கு மறு தினம் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு வருகைத் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று கடவுச்சீட்டை பெற வந்திருந்தவர்களுக்கு உரியவாறு வழங்க முடியாமல் போனதையடுத்து அங்கு பெறும் பதற்ற நிலை தோன்றியது. தொழில்நுட்பக் காரணமாக இந்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து நேற்று வந்திருந்த அனைவரையும் இன்று நன்பகல் 12 மணிக்குப் பிறகு வருகைத் தருமாறு கோரப்பட்டிருந்தது. இன்று வருகைத் தராதவர்களுக்கு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image