ஆர்ப்பாட்டக்காரர்களை விடுதலை செய்யாவிடின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டக்காரர்களை விடுதலை செய்யாவிடின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

​கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை விடுவிக்காவிடின் நாடு தழுவிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இன்று (08) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து லிப்டன் சுற்றுவட்டத்தில் நாளை (08) பிற்பகல் 2.30 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளதாகவும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image