ரயில் திணைக்கள தலைமையகத்திற்கு முன்பாக போராட்டம்

ரயில் திணைக்கள தலைமையகத்திற்கு முன்பாக போராட்டம்

 இலங்கை ரயில்வே திணைக்கள தலைமையகத்தின் முன்பாக பல தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டங்களை ஆரம்பித்துள்ளன.

உடனடியாக எரிபொருள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கோரி இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தொடர்ச்சியாக பொதுப்போக்குவரத்து சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் இயக்கப்பட்டதால் ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் நடைமேடைகள் பயணிகளால் நிரம்பியுள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டை மற்றும் மருதான ரயில் நிலைய பொறுப்பதிகளும் தமது சேவையில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image