அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை

அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மக்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் நிறுவனங்களுக்கு உத்தியோகத்தர்களை அழைப்பது தொடர்பான முடிவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர் அல்லது மாகாணங்களின் பிரதம செயலாளர்களின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையுடன் எடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த காலப்பகுதியில் எரிபொருள் பாவனையை குறைப்பதற்கு உத்தியோகத்தர்களின் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அனைத்து சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் இணையத்தில் நடத்தப்பட வேண்டும் எனவும் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

scnew.jpg

scnew01.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image