குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு

குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு

இன்று வழமைபோன்று சேவைகள் இடம்பெறும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

 
கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பொதுமக்கள் இன்று அத்தியாவசியற்ற சேவைகளுக்காக தமது அலுவலகத்திற்கு வருகைத் தருவதை தவிர்க்குமாறு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நேற்று தெரிவித்திருந்தது.
 
அத்துடன், ஒரு நாள் சேவைகளிலும் தாமதம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்;டது.
 
இந்த நிலையில், கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சீராக்கப்பட்டுள்ளதால், இன்றைய தினம் சேவைகள் வழமைபோன்று இடம்பெறும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image