மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ள ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம்

மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ள ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம்

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினரால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தம் நிறைவடைந்து சில மணி நேரங்களில் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் உப தலைவரை பணி இடைநீக்கம் செய்ய ரயில் திணைக்கள பொது முகாமையாளர் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இப்பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திணைக்கள பொது முகாமையாளர் சங்க உப தலைவரை பணி இடைநீக்கம் செய்ய தன்னிச்சையாக தீர்மானித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இப்பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image