பிரித்தானியா சுகாதாரத்துறையில் இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

பிரித்தானியா சுகாதாரத்துறையில் இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

ஐக்கிய இராச்சியத்தில் அதிகரித்து வரும் சுகாதாரத்துறையில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தொழில்வாய்ப்பை பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் குறித்த விடயம் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சிடுவது தொடர்பில் தொழில் அமைச்சர், வௌிவிவகார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் இணைந்து முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்து சுகாதார கூட்டுத்தாபனத்துடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image