சிங்கப்பூர் பயணிக்க இலங்கையர்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி

சிங்கப்பூர் பயணிக்க இலங்கையர்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி

இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் சிங்கப்பூருக்குள் பிரவேசிப்பதற்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள், அடுத்த மாதம் முதல் தளர்த்தப்படுவதாக சிங்கப்பூர் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ள இலங்கை பயணிகள் சிங்கப்பூருக்குள் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, பீஜி, மாலைத்தீவு மற்றும் துருக்கி உள்ளிட்ட 6 நாடுகளுக்கு சிங்கப்பூர் கொவிட்-19 காரணமாக பயணத்தடை விதித்திருந்தது.

இந்தநிலையில் இலங்கை, கம்போடியா, பிஜி, மாலைத்தீவு மற்றும் துருக்கி ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதலும், தாய்லாந்து பிரஜைகளுக்கு எதிர்வரும் 14ஆம் திகதி முதலும் சிங்கப்பூருக்கு பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image