அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப்பிரிவு ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு

அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப்பிரிவு ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகளை

எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

200 இற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பாடசாலைகள், கடந்த 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன.

அதன் இரண்டாம் கட்டமாக, சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய, 200 இற்கும் அதிக மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைய அனைத்து ஆரம்ப பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image