ராகலையில் வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் ஐவர் பலி

ராகலையில் வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் ஐவர் பலி

நுவரெலியா - ராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர்.

நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தந்தை, தாய், அவர்களின் மகள் மற்றும் மகளின் இரண்டு பிள்ளைகள் ஆகியோரே தீப்பரவலில் உயிரிழந்தனர். ஒரு வயது குழந்தையும், 11 வயது சிறுவனும் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளாவர்.

ராகலை பொலிஸார் நேற்றிரவு தீப்பற்றிய வீட்டை பரிசோதனைக்கு உட்படுத்தியதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்;ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன், தீப்பரவலுக்கான காரணத்தைக் கண்டறிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களில் ஒருவயது ஒரு வயது குழந்தைக:கு நேற்று (07) இரவு முதலாவது பிறந்த நாளுக்காக வீட்டில் சிறிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீ விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குழந்தையின் தந்தை வீட்டில் இருந்திருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (08) முற்பகல் 11.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்ற வலப்பனை நீதிமன்ற நீதவான் மரண விசாரணையை முன்னெடுத்தார். பின்னர் சட்ட வைத்தியரின் விசாரணைக்காக சடலங்களை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Photo_8_2.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image