சர்வதேச ஆசிரியர் தினத்தில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி அதிபர்கள் போராட்டம்

சர்வதேச ஆசிரியர் தினத்தில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி அதிபர்கள் போராட்டம்
சர்வதேச ஆசிரியர் தினமான எதிர்வரும் 6ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அதிபர்கள் தங்களுடைய வீடுகளின் முன்னால் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இலங்கை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
நாடு முழுவதும் உள்ள சுமார்  11,200 அதிபர்கள் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
 
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்க அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த  எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மூலம் - லங்காதீப

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image