இணையவழி கற்பித்தல் பகிஷ்கரிப்பு - ஜோசப் ஸ்டாலின் புதிய அறிவித்தல்

இணையவழி கற்பித்தல் பகிஷ்கரிப்பு - ஜோசப் ஸ்டாலின் புதிய அறிவித்தல்

இணையவழி (ஒன்லைன்) கற்பித்தல் பகிஷ்கரிப்பு உட்பட ஆசிரியர்கள் அதிபர்களின் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் மற்றும் தீர்மானங்களின் பின்னர் இன்று பிரதமர் தலைமையில் இடம்பெற்ற உபகுழு கலந்துரையாடல்களின் பின்னரும் சாத்தியமான தீர்மானங்கள் எட்டப்படவில்லை.

இதேநேரம், மீண்டும் அமைச்சரவை கலந்துரையாடல் அடுத்த திங்கள் இடம்பெறுவதாகவும், இது தொடர்பாக ஆசிரிய அதிபர்களின் சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய் நடாத்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள ளது.

அதுவரை இப்போராட்டத்தை தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image