சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளை கண்காணிக்க விசேட குழு

சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளை கண்காணிக்க விசேட குழு

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் இல்லத்தில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த 16 வயதான சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்க சட்டமா அதிபரால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

மூலம் - சூரியன் எவ் எம் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image