முதியோர் பராமரிப்பு: சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல்

முதியோர் பராமரிப்பு: சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல்

வீடுகளில் முதியவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளார்களாயின், அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு தயங்க வேண்டாம் என, பிரதி சுகாதார சேவைகள் பணிபபாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


வீடுகளில் மரணிக்கும் பெரும்பாலான நோயாளர்களுக்கு, பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே, அவர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகி இருந்தமை கண்டறியப்படுகிறது.

இதன் காரணமாகவே, கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை, அதிகரிக்கிறது.

நோய் அறிகுறிகளை கவனத்திற்கொள்ளாது இருப்பதன் காரணமாகவே இந்தகைய நிலை ஏற்படுகிறது.

இதனால், நோய் காரணமாக பாதிக்கப்படும் முதியோர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அற்றவர்கள் ஆகியோரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு தயங்க வேண்டாம் என, பிரதி சுகாதார சேவைகள் பணிபபாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image