பயணத்தடை நடைமுறையில் மாற்றமா? இராணுவத் தளபதி விளக்கம்

பயணத்தடை நடைமுறையில் மாற்றமா? இராணுவத் தளபதி விளக்கம்

எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு அன்று இரவு 11 மணி முதல் மீண்டும் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு 11 மணி முதல் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதன்படி, எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்த பயணக்கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் எதிர்வரும் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம் - சூரியன் எவ் எம் செய்திகள்

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்

பயணத்தடை அமுலும் பொலிஸாரின் அறிவுறுத்தலும்

பயணக் கட்டுப்பாட்டு காலத்திற்கான அரசின் புதிய தீர்மானங்கள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image