மலையக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க புதிய பயிற்சி நிலையம்

மலையக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க புதிய பயிற்சி நிலையம்

ஆறுமுகன் தொண்டமான் சமூக அபிவிருத்தி நிலையம் என்ற பெயரில் தொழில் அபிவிருத்தி பயிற்சி நிலையம் ஒன்று கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

மலையக இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கும், மேலதிக படிப்பினையை தொடர்வதற்குமாக இந்த பயிற்சி நிலையம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸ திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், இ.தொ.காவின் போசகர் முத்துசிவலிங்கம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன், பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், பிரதி தலைவர், கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

DSC09757.jpg

DSC09814.jpg

DSC09822.jpg

DSC09826.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image