சமுக வலைத்தளங்களில் இலகு கடன் பெற விரும்புகிறீர்களா?

சமுக வலைத்தளங்களில் இலகு கடன் பெற விரும்புகிறீர்களா?

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களூடாக இலகு கடன் வழங்குவதாக கூறி பண மோசடி நடைபெறுவது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இணையமூடாக தனிநபர்களின் அட்டைகள் தொடர்பான தகவல்கள், இணைய வங்கித் தகவல்கள், மொபைல் வங்கி தகவல்கள் என்பவற்றை வழங்குவது தொடர்பில் கவனமாக இருக்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரியுள்ளது.

மேலும் கையடக்க தொலைபேசியில் இணையதளத்தினூடாக நிரப்படும் விண்ணப்பப்படிவங்களில் மேற்குறிப்பிட்ட தகவல்களை வழங்குது தொடர்பிலும் அவதானத்துடன் இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நிகழ்நேர அறிவிப்பு சேவைகளைப் பெறுமாறும் இவ்வாறான மோசடி நடவடிக்கைகள் இடம்பெறும்போது உடனடியாக தகவல்களை பெற இச்சேவை உதவியாக இருக்கும் என்றும் மத்திய வங்கி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image