கொவிட்-19 சுகாதார வழிகாட்டல் மீண்டும் மாற்றப்படுமா? அரசின் அறிவித்தல்

கொவிட்-19 சுகாதார வழிகாட்டல் மீண்டும் மாற்றப்படுமா? அரசின் அறிவித்தல்

நாளாந்தம் கொவிட்-19 தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஆராயப்பட்ட பின்னரே தற்போது வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை மாற்றுவது குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயாகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவதானம் மிக்க நிலைமை காரணமாக, சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டது.

கடந்த 12 ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்காக இந்த வழிகாட்டல் வெளியாக்கப்பட்டது.

பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலோ அல்லது குறைவடைந்தாலோ இந்த வழிகாட்டல் மாற்றமடைய முடியும்.

எவ்வாறிருப்பினும், பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இந்த வழிகாட்டல் எவ்வாறாக மாற்றமடையும் என்பது தொடர்பான ஆலோசனை வழங்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image