கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை வழக்குகள்: 15க்கு திகதியிடப்பட்டுள்ளன

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை வழக்குகள்: 15க்கு திகதியிடப்பட்டுள்ளன

கிளிநொச்சியில் இயங்கிவரும் ஆடைத் தொழிற்சாலையிலிருந்து தொற்று பரவலை கட்டுப்படுத்த இருவேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், குறித்த இரு வழக்குகளும் எதிர்வரும் 15ம் திகதி விசாரணைகளிற்காக தவணையிடப்பட்டுள்ளது.

நேற்று (09) கரைச்சி பிரதேச சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு, இன்று (10) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பா.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

இதன்போது, குறித்த ஆடைத் தொழிற்சாலைகளை மூடியவாறுதான் தொற்று நோயினை கட்டுப்படுத்த வேண்டுமா? என்ற விளக்க அறிக்கையினை தவணையிடப்பட்ட எதிர்வரும் 15ம் திகதி மன்றில் அறிக்கையிடுமாறு நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 15ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த ஆடைத்தொழிற்சாலையிலிருந்து சமூக தொற்று ஏற்படாத வகையில், கட்டுப்படுத்தும் வகையில் தற்காலிகமாக ஆடைத் தொழிற்சாலையை மூடுமாறு பொது மக்கள் 6 பேர் மனு ஒன்றை இன்று சட்டத்தரணிகள் ஊடாக சமர்ப்பித்தனர்.

குறித்த மனுவினையும் ஏற்றுக்கொண்ட நீதவான், எதிர்வரும் 15ம் திகதி விசாரணைக்காக தவணையிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image