1,700 ரூபா சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு இடைக்காலத் தடையுத்தரவு!

1,700 ரூபா சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு இடைக்காலத் தடையுத்தரவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால தடையுத்தரவை  உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட மாட்டாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது.

குறித்த உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி பெருந்தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றபோது உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனம் உள்ளிட்ட 21 நிறுவனங்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image