பணியிட பாகுபாடுகளில் கடும் வீழ்ச்சி - சிங்கப்பூர் மகிழ்ச்சி

பணியிட பாகுபாடுகளில் கடும் வீழ்ச்சி - சிங்கப்பூர் மகிழ்ச்சி

சிங்கப்பூரில் பணியாற்றும் ஊழியர்களில் 8 வீதமானவர்கள் இவ்வாண்டு பணியிட பாகுபாடுகளை எதிர்நோக்கி வருவதாக சிங்கப்பூர் மனித வள அமைச்சின் மனிதவள மற்றும் தொகை மதிப்பீட்டு பிரிவு ஆகியன மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பணியட பாகுபாடு 24 வீதமாகவிருந்தது என்றும் இவ்வாண்டு கணிசமான வீழ்ச்சியேற்பட்டுள்ளதாகவும் அவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் வசிக்கும் தொழிலாளர்களில் எட்டு சதவிகிதத்தினர் பணியிட பாகுபாட்டை எதிர்கொண்டனர், 2018 இல் பாரபட்சம் நடந்ததாகப் புகாரளித்த 24 சதவிகிதத்தில் இருந்து ஒரு கூர்மையான வீழ்ச்சி, மனிதவள அமைச்சகத்தின் (MOM) ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இன்று (23) வௌியான குறித்த ஆய்வறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட பண்புகளால் பாகுபாடு காட்டப்படுவதாக முறைப்பாடு செய்தவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவான காரணமாக வயதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். ஏனைய காரணங்களாக கர்ப்பம், உளவளம், இனம், சம்பளம், பதவியுயர்வு போன்றவையும் காரணமாக காட்டப்பட்டுள்ளன.

அமைச்சும் நியாயமான வேலைவாய்ப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக முத்தரப்புக் கூட்டணியும் (TAFEP) கடந்த மூன்று ஆண்டுகளில் நேர்மையான நியாயமான> சமத்துவம் மிக்க தொழில்நடைமுறைகளை நாட்டினுல் ஏற்படுத்துவதற்கு பாடுபட்டு வருவதாக மனிதவள மற்றும் தொகை மதிப்பீட்டு பிரிவின் தலைவர் திரு ஆங் பூன் ஹெங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image