அபுதாபி விமானநிலையத்தில் தாக்குதல்- மூவர் பலி!

அபுதாபி விமானநிலையத்தில் தாக்குதல்- மூவர் பலி!

ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் பகுதியில் டிரோன் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

டிரோன் தாக்குதலில் விமான நிலையத்தில் உள்ள 3 எரிபொருள் தாங்கிகள் சேதமடைந்துள்ளதாகவும் ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்ககள் குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் இரு இந்தியர்களும் ஒரு பாகிஸ்தானியரும் உயிரிழந்துள்னர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image