பாதிக்கப்பட்ட மக்கள் மீது சுமத்தப்படும் சட்டத் திருத்தம்!

பாதிக்கப்பட்ட மக்கள் மீது சுமத்தப்படும் சட்டத் திருத்தம்!

தொழிலின்மை, நிலையற்ற சம்பளம், நிலையற்ற தொழில்கள், பொருளாதார மந்தநிலை போன்றவற்றினால் மக்கள் சிக்கித் தவிக்கும் நிலையில் அரசாங்கம் சட்ட சீர்த்திருத்த முன்மொழிவை முன்வைத்துள்ளது என்று பல்கலைகழக விரிவுரையாளர்கள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2023ம் ஆண்டுக்கான பாதீடு குறித்த உரையில் 'ஏற்றுமதி மையப் பொருளாதாரமொன்றை குறிக்கோளாக கொண்டு சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று கடந்த நவம்பர் மாதம் 2022 இல் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இது இவ்வாறு இருக்க தற்போது நடைமுறையில் இருக்கும் தொிலாளர் சார் சட்டக் கோவைக்கு பதிலீடாக தொழிலாளர் மற்றும் தொழில்வழங்குநர் ஆகியோரின் சம உரிமைகளை சமநிலையாக பேணும் வகையிலான தொழிலாளர் சட்ட அமைப்பொன்று உருவாக்கப்படும் என்று தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர ஷான் யஹம்பத் சுட்டிகாட்டியிருந்த அதேவேளை, 2023 மே தினத்தன்று சீர்த்திருத்தக் கொள்கைகளடங்கிய 11 அம்ச நிரலொன்றை சமர்ப்பித்திருந்தார். மேலோட்டமாக மிக கவர்ச்சிகராக கூறப்பட்டிருந்தாலும் முறைசார் துறைகளில் பணியாற்றும் மக்களின் கூட்டு ஒருமைப்பாட்டை கவனமாக முறியடிக்கும் முயற்சியாகவே இவை காணப்படுகின்றன. ''எம்மிடம் இருப்பது மிகப் பழமையான தொழிற்சட்டங்களாகும். அவை முதலீட்டாளரை நாட்டுக்குள் வரவிடாமல் தடுக்கின்றன' என்ற கூற்று இதனை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 14ம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் தொழிலாளர் சட்டங்களில் சுமார் 20 பகுதிகளில் சீர்த்திருத்தங்கள் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள தொழில் அமைச்சர், தோட்டத்துறை மற்றும் EPF மற்றும் ETF ஆகியவற்றின் விதிகளில்,முறைசாரா தொழிலாளர்களுடைய முக்கியத்துவத்தையும், பெரும்பாலான முறைசார் தொழிற்றுறையில் இருந்து முறைசாரா தொழிற்றுறைக்கு மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியிருந்தார். இதுவே தற்போதைய சட்டத் திருத்தத்தின் அபாயகரமானதொன்றாக காணப்படுகிறது.

சமூக பாதுகாப்பு மற்றும் முறைசாரா தொழிற்றுறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் கருதி முன்னெடுக்கப்படுவதாக மேலோட்டமாக காட்டப்பட்டாலும் கூட ஏற்கனவே பொருளாதார நெருக்கடி மற்றும் தொழிலின்மை ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தவிர்த்தல், மாற்றுத்திறனாளிகளை உள்வாங்கக்கூடிய சட்ட வரைவுகளை அறிமுகம் செய்தல் போன்ற விடயங்கள் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பணியிடங்களில் மகளிர் பாதுகாப்பை விடவும் அவர்களுடைய உழைப்பை சுரண்டும் வகையிலேயே இவை அமைந்துள்ளன.

இலங்கைத் தொழிற்சட்டங்கள் பாரிய மாற்றங்களை கொண்டு வராவிடினும் கூட தொழிலாளர் உரிமைகளை முற்றாக மறுக்காமல் ஓரளவுக்கு பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் தற்போதைய திருத்தத்தினூடாக தொழிற்படையை பிளவுப்படுத்தல், முறைசார் தொழிற்றுறைகளை முறைசாரா துறைகளாக மாற்றல் மற்றும் புற ஒப்படைப்புச் செய்தல் போன்ற பலமிழக்கச் செய்யும் செயல்களினால் தொழில் முகாமைகள் இச்சட்டத்தை தவறாக பயன்படுத்தும் நிலை தற்போது தோன்றியுள்ளது. முறைசார் துறைகளில் பெரும்பாலும் பெண்களே பங்களிப்பை வழங்குகின்றனர். நாட்டில் முகாமைத்துவ செயற்பாடுகள் நிலையற்ற நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு பெண்களே முதலில் பலியாகின்றனர்.

கொவிட் தொற்று காலப்பகுதியில் உள்நாட்டிலும் வௌிநாடுகளிலும் புதிய மாற்றங்களை எதிர்நோக்க முடியாது அல்லலுற்றதை நாம் கண்கூடாக கண்டோம். தொழிற்சட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு தொழிலாளர்கள் உதாசீனப்படுத்தப்பட்டு கைவிடப்பட்டதையும் கண்டோம். ஆனாலும் கடினமான சூழ்நிலைகளில் அவர்கள் தொழில் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்நிலை தொழில் சட்டத் திருத்தங்களின் பின்னர் முறைப்படுத்தப்படும் ஆபத்து காணப்படுகிறது.

தொழிலாளர் மற்றும் தொழில் வழங்குநர்களுக்கு இடையிலான ஒப்பந்த உறவு வலுவிழக்கச் செய்வதனூடாக தொழிற்றுறைகளை முறைப்படுத்தாமல் இருத்தல் தொழில் பாதுகாப்பின்மை மற்றும் தொழிலாளர்களை சுரண்டும் நிலை போன்ற அபாயங்கள் உருவாகக்கூடும். தொழிலுக்கு இணைத்தல் மற்றும் நீக்குதல் தொடர்பான சட்டங்கள் தௌிவாக வரையறை செய்யப்பட்டு தொழிலாளர்கள் பாதுகாக்கப்படவேண்டும். தற்போதைய சட்டத்தில் அந்த பாதுகாப்பு உள்ளது. அவற்றை தளர்த்துவதனால் தொழிலாளர் நலன் பாதிக்கப்படும். பணிநேர நெகிழ்வுத்தன்மை பேணப்படுவதாக கூறப்படுகிறது. எனினும் இது சுரண்டல்களுக்கும் அலுவலக நேர பாதுகாப்பின்மைக்கும் வலிவகுக்கும் அபாயம் காணப்படுகிறது.

நோய்கால விடுப்பு. பேறுகால விடுப்பு மற்றும் ஓய்வு நேரங்கள் என்பன இதனால் இல்லாது போகும் நிலை ஏற்படும். ஆடைத் தொழிற்சாலைகளில் 10 நாட்களுக்கும் மேலதிகமாக இரவு நேர வேலைகளில் ஈடுபடக்கூடாது என்ற சட்டம் இருந்த போதிலும் கூட அத்துறைகளில் பெண்கள் குறைந்தபட்ச பாதுகாப்போடு நீண்ட நாட்கள் இரவு பணிகளில் ஈடுபடுவதை நாம் காண்கிறோம்.

முன்மொழியப்பட்டுள்ள தொழிற்சட்ட சீர்த்திருத்தங்களாவன, தொழிலாளர் சட்டங்களை வலுவிலகக்கச் செய்வதோடு தொழிலாளர்களுக்கு ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் நீக்கி வலுவிழக்கச் செய்யும். கடந்த மாதம் நடைபெற்ற தேசிய தொழில் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின்போது அரச பிரதிநிதிகள், தொழில்வழங்குநர்கள, தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தபோதிலும் கூட அரசியல் கட்சி சாராத தனியார் தொழிற்றுறைகளைச் சேர்ந்த நான்கு தொழிற்சங்கங்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை. தொழிலாளர்களின் பிரதிநிதித்துவ அமைப்புக்களை வலுவிழக்கச் செய்ய அரசாங்கம் முனைப்படுடன் செயற்படுகிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

இதுவே, பெருந்தோட்டத்துறையை நோக்குமிடத்து அத்தொழிலாளர்கள் சமூகப்பிளவு, தொழிற்பாதுகாப்பின்மை, போதுமான நிலங்கள் இல்லாமை போன்ற சிக்கல்களுக்கு முகங்கொடுக்கவுள்ளனர். வாழ்க்கைச் செலவு, பிரஜைகளுக்கு வழங்கப்படும் அடிப்படை உரிமைகளான சீரான வாழ்க்கைநிலை, பணியிட பாதுகாப்பு, நிலவுரிமை, வீட்டு வசதி மற்றும் கல்வி உரிமைகளுக்காகவும் அவர்கள் காலங்காலமாக போராடி வரும் நிலையில், அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அநீதிகளை கலைய ''நவீன தொழில் உலகிற்கேற்ற தொழிலாளர்களை உருவாக்குவதாக அமைச்சரின் 11 அம்ச நிரலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழிற்சட்டங்களை வலுவிழக்கச் செய்வதனூடாக நாட்டுக்குள் முதலீட்டாளர்களை உள்ளீர்க்க அரசாங்கம் முயல்வதுடன் பொருளாதாரத்தையும் நிலை நிறுத்த முயல்கிறது. இலங்கையின் பொருளாதாரம் 2022ம் ஆணடு இறுதி காலாண்டில் 12.4 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதுவே 2023 ம் ஆண்டின் முதலாவது காலாண்டில் 11.5 வீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது.இதற்கு காரணம் நாட்டில் உள்ள தொழிற்சட்டங்கள் அல்ல. சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது இதற்குத் தீர்வாகாது. உண்மையில் பொதுச் செலவுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், தொழில் உருவாக்கம் தொடர்பான கொள்கைகள் இன்மை, சமூக பாதுகாப்பின்மை மற்றும் தொழிலாளர் நலன் பேணபபடாமை போன்றன ஆகும்.

தொழிலாளர்களுடை நிலை போன்ற அடிப்படை விடயம் தொடர்பில் தௌிவான நிலைப்பாட்டை எடுப்பது கல்வியியலாளர்களான எங்களின் கடப்படாக உள்ளது. அத்துடன் இது எம்மமைனவரையும் பாதிக்கும் விடயமாகவும காணப்படுகிறது. உற்பத்தி மற்றும் வேலைத்தளங்களில் பேணப்படும் ஜனநாயக நடைமுறைகளும் உறுதிப்பாடும் கொண்ட தொழிலாளர்களுக்கு அமைய மக்கள் மைய தொழிற்கொள்கைகள் காரணமாகின்றன. இவை இல்லாமல் போனால் எம் எதிர்காலம் நிலையற்றதாகுவதுடன் கவலைக்கிடமானதாகவும் மாறும் நிலைத் தோன்றும். இதனூடாக ஏற்படும் சமூக அமைதியின்மைகளினால் ஏற்கனவே சர்வாதிகார போக்குடன் காணப்படும் அரசாங்கம் மேலும் மோசமாக மாறும் நிலை தோன்றும் . எமது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதனூடாக எமக்கான சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவது அவசியம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SIGNED BY

M. Navaratna Bandara, formerly Univ. of Peradeniya, Ahilan Kadirgamar, of Jaffna, M.J.H. Amandakoon, Univ. of Peradeniya, Amalka Wijesuriya, of Ruhuna, Anuruddha Karunarathna, of Peradeniya, Anushka Kahandagama, formerly of Colombo, Arjuna Aluwihare, formerly of Peradeniya, Arjuna Parakrama, of Peradeniya, Aruni Samarakoon, of Ruhuna, Athulasiri Samarkoon, The Open University of Sri Lanka, Avanka Fernando, of Colombo, P.B.W. Rathnayake, Univ. of Peradeniya, Barana Jayawardana, of Peradeniya, Bahirathy R, Univ. of Jaffna, Buddhima Padmasiri, The Open University of Sri Lanka, Camena Guneratne, The Open University of Sri Lanka, Chirath Jeewantha, of Ruhuna, Chulani Kodikara formely of Colombo, Crystal Baines, of Peradeniya, Dayapala Thiranagma, formerly of Kelaniya, Dhammika Gamage, of Peradeniya, Dhammika Herath, of Peradeniya, Dhammika Jayawardena of Sri Jayawardenepura, Dhanuka Bandara formerly Of Peradeniya, Dilini Hemachandra, of Peradeniya, Dinesha Samararatne of Colombo, Erandika de Silva, of Jaffna, Farzana Haniffa, of Colombo, Fazeeha Azmi, Univ of Peradeniya, Ganganee Chamdima Samaraweera, of Ruhuna, H.M.T.V.K. Jayasooriya, Univ. of Peradeniya, Harshana Rambukwella, formerly The Open University of Sri Lanka, Hasini Lecamwasam, of Peradeniya. Hasitha Pathirana of Kelaniya, Hettigamage Sriyananda, The Open University of Sri Lanka (Professor Emeritus). Hiniduma Sunil Senevi, of Sabaragamuwa, Imani Bakmeedeniya, of Peradeniya, Jayadeva Uyangoda, of Colombo (Professor Emeritus), Janith Wickramasinghe, of Colombo, Jennifer Edama, of Peradeniya, Jithmi Athukorale, of Peradeniya, M.Vihangi Semini, Univ. of Peradeniya, Kamani Sylva, of Peradeniya, Kanchuka Dharmasiri, of Peradeniya, Kasun Gajasinghe, of Peradeniya, Kaushalya Perera, of Colombo, Kethakie Nagahawatte of Colombo, Krishan Siriwadhana, of Colombo, Krishantha Fedricks, Uni. of Colombo, Krishmi Apsara, of Peradeniya, Kumudu Kusum Kumara, formerly of Colombo, A.M.Jayasinghe,Univ. Of Peradeniya, Liyanage Amarakeerthi, Of Peradeniya, Madhara Karunarathna, of Peradeniya, Maduranga Kalugampitiya, of Peradeniya, Mahendran Thiruvarangan, of Jaffna, Malika Perera, of Peradeniya, A. Nuhman. Formerly Univ. of Peradeniya, Muditha Dharmasiri: of Peradeniya, Nadeesh de Silva, The Open University of Sri Lanka, Nalika Ranathunge, of Ruhuna, Neavis Morais, The Open University of Sri Lanka, Nicola Perera, of Colombo, Nilantha Liyanage, of Ruhuna, Nirmal Ranjith Dewasiri, of Colombo, Sivakaran, Univ. of Jaffna, W. Prins, Univ. of Ruhuna, Paba Suraweera, of Peradeniya, Pavithra Jayawardena, of Colombo, M. Jayaweera Univ. of Peradeniya, Prabha Manuratne, of Kelaniya, Prabhath Jayasinghe, University of Colombo, Pradeepa Korale Gedara, of Peradeniya, Pradeep Peiris, of Colombo, Priyantha Fonseka of Peradeniya, T.Gamalath, Univ. of Peradeniya, Ramesh Ramasamy, of Peradeniya, Ramila Usoof, of Peradeniya, Ramindu Perera, The Open University of Sri Lanka, Ramya Kumar, of Jaffna, Ranjini Obeyesekere; formerly , of Peradeniya, anjit Wijekoon, formerly of Peradeniya, Rupika Rajakaruna, of Peradeniya, Ruth Surenthiraraj, of Colombo, Sabreena Niles, of Kelaniya, Sachithra Edirisinghe, formerly of Peradeniya, Sahan Wanniarachchi,Univ. of Peradeniya, Sahani Situbandara, of Peradeniya, Saman Pushpakumara, of Peradeniya, Sasanka Perera, Formerly of Colombo, Sasinindu Patabendige, of Jaffna, Savitri Goonesekere, of Colombo (Professor Emeritus), Selvaraj Vishvika, of Peradeniya, Shalini Wijerathna,Univ. of Peradeniya, Shamala Kumar, of Peradeniya, Sitralega Maunaguru formerly Eastern Sri Lanka, Sivamohan Sumathy, of Peradeniya, Sudesh Mantillake, of Peradeniya, Sumith Chaaminda, of Colombo,Supoorna Kulatunga, of Peradeniya, Suranjith Gunasekara, of Ruhuna, Susantha Rasnayake, of Peradeniya, Susith Siriwardhana, Rajarata of Sri Lanka, Shyamani Hettiarachchi, of Kelaniya, Thiru Kandiah, formerly of Peradeniya, Thushara Kamalrathne, Univ of Peradeniya, Udara Rajapaksha, of Peradeniya, Udari Abeysinghe, of Peradeniya, Unnathi Samaraweera,Univ. of Colombo, Upul Abeyrathne, of Peradeniya, Varangana Ratwatta, of Peradeniya, Vijaya Kumar, of Peradeniya (Professor Emeritus), Visakesa Chandrasekaram, of Colombo, Vivimarie Vanderpoorten Medawattegedera, The Open University of Sri Lanka, M. Rohan Laksiri, Univ. of Ruhuna, Yasas Kulasekara, of Peradeniya

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image