நோர்வூட் ஏழு தோட்ட பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுத்தலில்

நோர்வூட் ஏழு தோட்ட பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுத்தலில்

நோர்வூட் பொலிஸ் பிரிவின் இன்ஜஸ்ட்ரி இன்ஜஸ்ட்ரி கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட தோட்ட பகுதிகள் நேற்று (03) பிற்பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இன்ஜஸ்ட்ரி கிராம உத்தியோகத்தர் பிரிவின் ஹொன்சி பிரிவு, இன்ஜஸ்ட்ரி கீழ் மற்றும் மேல் பிரிவு, பாத்போட் பிரிவு, பீரட் பிரிவு, பிலிங்கிபோனி பிரிவு மற்றும் அபகனி பிரிவு ஆகிய பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 30 ஆம் திகதி புளியாவத்தை பிலிங்கிபோனி பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஒன்றில் சேவையாற்றும்; 180 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர்பரிசோதனைக்கு அமையவே 29 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி இன்ஜஸ்ட்ரி கிராம உத்தியோகத்தர் பிரிவில்19 பேருக்கும், என்பீல்ட் கிரம உத்தியோகத்தர் பிரிவின் என்பீல்ட் மற்றும் போடைஸ் ஆகிய தோட்டங்களில் தலா 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்ஜஸட்ரி கிரம உத்தியோகத்தர் பிரிவின் ஏழு தோட்ட பகுதிக்குள் உட்பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமுலாகியுள்ள பயணத்தடை மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளதுடன்; அங்;கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image