பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் குறித்து தௌிவுபடுத்தல்

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் குறித்து தௌிவுபடுத்தல்

 பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் உலக பிரசார நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வு மற்றும் தௌிவுபடுத்தல் இன்று (25) கொழும்பு ஜானகி ​ஹோட்டலில் நடைபெற்றது.

ப்ரொடெக்ட் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரச, தனியார் துறை தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் என்பன கலந்துகொண்டிருந்தன.

16 நாட்கள் உலக பிரசார செயற்பாட்டினூடாக இலங்கையில் தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை இல்லாதொழிப்பதை உறுதி செய்வதற்கு ILO C190 மற்றும் வீட்டுப்பணிப்பெண்களின் சட்ட ரீதியான தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ILO C189 ஆகிய சமவாயங்களை அங்கீகரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image