கிராமசேவகர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் போட்டிப்பரீட்சை

கிராமசேவகர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் போட்டிப்பரீட்சை

நாட்டில் காணப்படும் கிராமசேவகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளது என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எச்.எச்.எம் சித்ராரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள வெற்றிடங்களை ஏற்கனவே நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையை அடிப்படையாக கொண்டு நியமனங்கள் வழங்க பிரேரிக்கப்பட்ட போதிலும் அதற்கு அரசசேவை ஆணைக்குழு இணக்கப்படவில்லை என்றும் அதனால் புதிதாக போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு நேர்முகத்தேர்வின் பின்னர் நியமனம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே விண்ணப்பங்கோரலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

டெக்மோர்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image