அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 45 பேர் கைது

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 45 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 45 பேர் உனவட்டுனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து, 23.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினரின் உதவியுடன் ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் ஏழு பெண்களும் அடங்குவதாகவும் கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கான நம்பிக்கையில் குறித்த குழு கிட்டத்தட்ட ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் தங்கியிருந்த நிலையில், கடந்த வாரம், வவுனியாவில் இருந்து பஸ்ஸில் ஹோட்டலுக்கு வந்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்த பொலிசார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image