புலம்பெயர் தொழிலுக்கு செல்லும் முன் வழங்கப்படும் பயிற்சியை நிறுத்தப் போவதில்லை

புலம்பெயர் தொழிலுக்கு செல்லும் முன் வழங்கப்படும் பயிற்சியை நிறுத்தப் போவதில்லை
புலம்பெயர் தொழிலுக்காக செல்லும் முன் வழங்கப்படும் பயிற்சியை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை என்று  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
வீட்டுப் பணிப்பெண்களுக்கு கட்டாய 28 நாள் பயிற்சி அளிக்கும் நடவடிக்கையை அவதூறாகப் பேசும் ஆட்கடத்தல்காரர்களே இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 
 
கொரிய நாட்டின் விவசாயத்துறையில் தொழில்வாய்ப்புகளை இலக்காக்கொண்ட பயிற்சி மற்றும் வீட்டுப்பணிப் பெண்  வேலைகளுக்கான தொழில் சார்ந்த பயிற்சிகளை வழங்கும் ஸ்ஜோன்க் வோல்ட் Sjong World, நிறுவனத்தின் பயிற்சி நிலையம் மற்றும் அலுவலகத்தை, காலியில் நேற்று (06) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட  போதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
 
'ஒரு காலத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் இலங்கையர்களை எந்தவித பயிற்சியும் இல்லாமல் வெளிநாடுகளுக்கு அனுப்பியது. ஆனால், முறையான பயிற்சியின்றி யாரையும் அனுப்புவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளோம். சில முகவர் நிறுவனங்கள் இதில் திருப்தி அடையாமல் போகலாம். எந்த சூழ்நிலையிலும் இந்த முடிவை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்றும் அமைச்சர் கூறினார் 
 
நமது  நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலான பட்டதாரிகளில் பெரும்பாலானவர்கள் பெண்கள், ஆனால் பெரும்பாலான பெண்கள், தொழில்களில் ஈடுபடாமல் இருக்கின்றனர்.  இருப்பினும் படித்த பெண்கள் திருமணத்திற்கு பிறகு தொழில்களுக்கு செல்வதில்லை. விசேடமாக நமது நாட்டில் வணிகத் துறையில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவு. பெண்களின் தொழில் முயற்சியும் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது. நாட்டின் தொழில்முனைவுக்கு வீட்டை நிர்வாகம் செய்யும் பெண்கள் முன்வருவார்களாயின் நாட்டுக்கு பெரும் பலமாக அமையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image