வௌிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரிப்பு

வௌிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரிப்பு

தொழிலாளர் பணவனுப்பல்கள் வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆகஸ்ட் மாதம் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைப் பதிவுசெய்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தொழிலாளர் பணவனுப்பல்கள்:

தொழிலாளர் பணவனுப்பல்கள் 2022 ஆகஸ்ட்டில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 325 மில்லியனுடனும் 2023 யூலையில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 541 மில்லியனுடனும் ஒப்பிடுகையில் 2023 ஆகஸ்ட்டில் ஐ.அ.டொலர் 499 மில்லியனாக விளங்கின.

அதேவேளை, தற்காலிகத் தரவுகளின் அடிப்படையில், 2022இல் பதிவுசெய்யப்பட்ட 311,056 எண்ணிக்கையிலான மொத்த ஆண்டு ரீதியிலான
புறப்படுகைகளுடன் ஒப்பிடுகையில் 2023 ஆகஸ்ட் மாதத்திலும் 2023 சனவரி தொடக்கம் ஓகத்து வரையான காலப்பகுதியிலும் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பிற்கான நாட்டிலிருந்தான மொத்தப் புறப்படுகைகள் முறையே 26,131 மற்றும் 197,146ஆக விளங்கியதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

CBSL_forex.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image