புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கான தெளிவுபடுத்தல்

புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கான தெளிவுபடுத்தல்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு,
புதிதாக அனுமதிப்பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கான தெளிவுபடுத்தும் நிகழ்வு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்றது.
 
இலங்கையர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஈடுபடுத்தும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய முறை, புலம்பெயர் தொழிலாளர் தொழில் துறை குறித்து நிலவும் சட்ட பின்னணி ,வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையின் புதிய போக்குகள், பணியகம் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களுடன் தொடர்புபட்டு மேற்கொள்ளப்படும் விடயங்களின் போது அறிந்து கொள்ள வேண்டிய தகவல் தொழில்நுட்ப செயல்முறை ,வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை தொடர்பான பரந்த அறிவு தொடர்பில் புதிதாக அனுமதிப்பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை பணியகம் இதன் போது மேற்கொண்டது..
 
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பி சேனாநாயக்க, மேலதிக பொது முகாமையாளர்களான எம். ஆர். சி.பி ஏகநாயக்க, பிரதிப் பொது முகாமையாளர்களான ஏ.கே.யு.ரோஹன, இந்திரா பதிநாயக்க, செனரத் யாப்பா, பி. எம். ரத்னசிங்க ஆராச்சி,  டபிள்யூ, ஏ.கே.குமாரி, ரொஹான் விஜேசேன மற்றும் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image