சட்டவிரோதமாக வௌிநாடு பயணத்துக்கு உதவிய இருவர் கைது!

சட்டவிரோதமாக வௌிநாடு பயணத்துக்கு உதவிய இருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் வௌிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்று தரும் நோக்கில் பணம் பெற்றனர் என சந்தேகிக்கப்படும் இருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கடந்த 4ம் திகதி நீர்கொழும்பில் நடத்தப்பட்ட தேடுதலின் போது காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சட்டவிரோத வௌிநாட்டுப் பயணத்திற்கு வழிவகுக்கும் வகையில் 20 பேரிடமிருந்து சுமார் 5 மில்லியன் ரூபா பெற்றுக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 30 மற்றும் 41 வயதைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமான முறையில் வௌிநாடு செல்வது போன்ற செயற்பாடுகள் தண்டனைக்கு வழிவகுக்கும் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களிடம் கடற்படை வேண்டுகோள்விடுத்துள்ளது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image