விமானப் பயணிகளுக்கு இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை

விமானப் பயணிகளுக்கு இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை

இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் இலங்கையர்களினால் நிரப்பப்படும், வருகைதரல் மற்றும் வெளியேறுதல் அட்டையை (Arrival and Departure Card) இணைய வழியில் (Online) நிரப்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று (01) தொடக்கம், இந்த நடைமுறை அமுலுக்குவந்துள்ளது.

அதற்கிணங்க, விமானப் பயணிகள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் www.immigration.gov.lk  என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில், அல்லது https://eservices.immigration.gov.lk/emb/eEmbarkation/'#/home-page எனும் இணையப்பக்கத்திற்கு பிரவேசித்து, தாம் விமானத்தில் பயணிக்கவுள்ள திகதிக்கு 3 நாட்களுக்கு முன்னர் இந்த அட்டையை நிரப்புவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்மூலம் விமான நிலையத்தில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்து, குடிவரவு மற்றும் குடியகல்வுப் பணிகளை இலகுவாக நிறைவுசெய்து பயணத்தை மேற்கொள்ள முடியும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image