இலங்கை எழுத்தாளருக்கு 'புக்கர்' விருது

இலங்கை எழுத்தாளருக்கு 'புக்கர்' விருது

2022ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளரான ஷெஹான் கருணாதிலக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவரது “The Seven Moons of Maali Almeida ” என்ற என்ற நூலுக்கு இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிவில் யுத்தம் தொடர்பில் எழுதப்பட்டுள்ள “The Seven Moons of Maali Almeida ” நூலுக்கு புக்கர் விருது கிடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட நூல்கள் இவ்விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டன.

ஷெஹான் கருணாதிலக்கவின் முதலாவது நூலான “Chinaman” நூல் 2021ம் ஆண்டு வௌியிடப்பட்டதுடன் அந்நூலானது Rolling Stone, GQ மற்றும் National Geographic ஆகிய பதிப்பு நிறுவனங்களினால் வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image