தாய்மார் வௌிநாட்டுக்கு வேலைவாய்ப்பிற்கு செல்வது தொடர்பில் புதிய நிபந்தனை!

தாய்மார் வௌிநாட்டுக்கு வேலைவாய்ப்பிற்கு செல்வது தொடர்பில் புதிய நிபந்தனை!

இரண்டு வயதுக்கும் குறைந்த பிள்ளைகள் உள்ள தாய்மார் வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வௌியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டுப் பயணங்களின் போது அந்த குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்விக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கிராம அதிகாரி அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது குடும்பப் பின்னணி அறிக்கையை வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்திற்கு ஜூன் 27ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதன்படி, புதிய திருத்தங்களின் பிரகாரம் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதை அனுமதிக்காத வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செயற்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை நேற்று நேற்றுமுன்தினம் (19) முதல் அமுலுக்கு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image