முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை 5000 ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை 5000 ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை

நாட்டில் உள்ள அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் 2500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை 5000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய பேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சரவைப் பேச்சசாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி இந்த தீர்மானத்தை மற்றுமொரு குழுவில் வழங்கியிருந்ததாகவும், அதற்கமைய 8700 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image