சில அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் சேவை நீடிப்பு - அமைச்சரவைப் பேச்சாளர்

சில அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் சேவை நீடிப்பு - அமைச்சரவைப் பேச்சாளர்

சில அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அது பாரம்பரியமாக தொடரும் நிலை அல்ல என்றும் அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, சட்டமா அதிபர் மற்றும் பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஆகியோரின் சேவை நீடிப்பு குறித்து ஊடகவியலாளர் ஒருவர், எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்குபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், அரசியலமைப்பிற்கு அமைவாக அக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தலுக்காக வரவு செலவு திட்டத்தின் ஊடாக பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் அவசரமாக புதிய அதிகாரிகளை நியமித்து, இதுவரை மேற்கொண்ட கடமைகளை தொடர்ச்சியாக கொண்டு செல்ல முடியாது. சில அத்தியயாவசிய சேவைகளில் சிக்கல்கள் ஏற்படாமல் இருப்பதைத் தடுக்க விசேட நிபந்தனைகளின் கீழ் சேவை நீட்டிப்புகளை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image