யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அதிபர் - ஆசிரியர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அதிபர் - ஆசிரியர் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யாழ்ப்பாண கல்வி வலயத்துக்கு முன்பாக கவனயீப்புப்பு போராட்டம் ஒன்று நேற்று (12) நடத்தப்பட்டது.
பதாகைகளை தாங்கியவாறு அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறும், அதிபர் ஆசிரியர்களின் பதவி உயர்வை நடைமுறைப்படுத்து, அதிபர் ஆசிரியர்களில் கொள்ளை அடிக்கும் பணத்தை வழங்கு, மாணவர்களின் போசாக்கை உறுதிப்படுத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
 
இதன்போது கோஷம் எழுப்பியவாறு யாழ்ப்பாணம் வலய கல்வி பணிமனைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது 50க்கும் மேற்பட்ட அதிபர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 
 
Jaffna_teacher_01.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image