கிராம உத்தியோகத்தர்கள் நாளை முதல் எதிர்ப்பு வாரம் பிரகடனம்!

கிராம உத்தியோகத்தர்கள் நாளை முதல் எதிர்ப்பு வாரம் பிரகடனம்!
நாளை (12) முதல் எதிர்ப்பு வாரமொன்றை பிரகடனப்படுத்தி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகக் கிராம உத்தியோகத்தர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது. 
 
கிராம உத்தியோகத்தர்களுக்கான புதிய சேவை யாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேநேரம் நாளையும், நாளை மறுதினமும் சகல சேவைகளிலிருந்தும் தாம் விலகவுள்ளதாகக் கிராம உத்தியோகத்தர்கள் ஒன்றியத்தின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image