திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் நேற்று (02) கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
 
அரச துறையில் தங்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கக் கோரி இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

திருகோணமலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
 
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் kட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
 
2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பட்டத்தினை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு அரசன் நியமனத்தினை வழங்க கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
நீண்ட காலமாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளதாகவும் அவர்களுக்கான அரச நியமனங்கள் தொடர்பில் அரசியல்வாதிகளும் அரசாங்கமும் பாராமுகமாகவும் இருப்பதாகவும் தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
தமக்கான நியமனங்கள் கிடைக்கும் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image