பாடசாலைகளுக்கு முன்பாக இன்று அதிபர் - ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

பாடசாலைகளுக்கு முன்பாக இன்று அதிபர் - ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு பாடசாலைகளுக்கு முன்பாக இன்றைய தினம் (02) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. 
 

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு தீர்வு கோரிஇ சுகயீன விடுமுறையை பதிவு செய்த அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கடந்த 26 ஆம் திகதி கொழும்பு முன்னெடுத்த போராட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 27ஆம் திகதியும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உடனடியாகப் பதில் வழங்க வேண்டும் எனக் கோரி, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

 பாடசாலை நேரத்தின் பின்னர் குறித்த போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image