அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த அடையாள பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியின் நடவடிக்கைகளுக்கு எதிராக சுகாதார அமைச்சிடம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலும் அதற்கான உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்து இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அந்த சங்கம் திட்டமிட்டிருந்தது.
 
இந்த நிலையில், சுகாதார அமைச்சின் செயலாளருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து பணிப்புறக்கணிப்பை கைவிட்டத் தீர்மானித்துள்ளதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image