அரச ஊழியரின் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்கு கட்டுப்பாடு

அரச ஊழியரின் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்கு கட்டுப்பாடு

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை கவனத்திற் கொண்டு, அரசாங்க ஊழியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான விஷேட சுற்றறிக்கை ஓரிரு தினங்களில் வெளியிடப்படுமென அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கான அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தவிர்க்கும் வகையில், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கியுள்ள முதற்கட்ட கடன் தொகையிலிருந்து ஒரு தொகையை பெற்றுக் கொள்ளவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மூலம் - தினகரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image