அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் அரச ஊழியர்களுக்கு புதிய அறிவித்தல்

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் அரச ஊழியர்களுக்கு புதிய அறிவித்தல்

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அறிவித்தல் அரச உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி, மின்சாரம், கனியவளம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து மீண்டும் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில்

1. மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள்

2. பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம்

3. வைத்தியசாலைகள், நேர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்த வகையிலான சகல சேவைகள், வேலைகள் அல்லது தொழில் பங்களிப்பு.

என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image