தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு

தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை பெப்ரவரி மாதம் 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
 
எனினும் குறித்த தினங்களில் அடையாளம் இடுவதற்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தவாறு, அரசாங்க அச்சுத் திணைக்களம் வாக்குச் சீட்டுகளை உரிய தினங்களில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்காமை காரணமாக பெப்ரவரி 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறாது.
 
மீண்டும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறுகின்ற தினங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image